ரகசிய சிநேகிதிக்கு – 1
20 அக் 2010 8 மறுமொழிகள்
in கவிதைகள் குறிச்சொற்கள்:ஊடல், காதல், காமம்
ஒரு கன்னத்தில் அறைந்தாய் மறுகன்னத்தைக் காட்டினேன் மகிழ்ச்சியோடு … ஒரு கன்னத்தில் முத்தமிட்டாய் மறுகன்னத்தைக் காட்டினேன் மறுப்பேதும் சொல்லாமல் …அன்பே ஆத்திரமோ, அரவணைக்க ”நீதான்டாஎல்லாமே” என்றாய். திட்டுக்கள் கெஞ்சல்களாய், கெஞ்சல்கள் கொஞ்சல்களாய், கொஞ்சல்கள் சில்மிஷங்கள்களாய் உருமாறி ஒர் அழகியபுணர்தலில் முடிந்தது.
பிரிவின் பயணம்
01 Apr 2010 13 மறுமொழிகள்
in கவிதைகள் குறிச்சொற்கள்:காதல், சோகம், தனிமை, பிரிவு
எதுவும் மாறவில்லை
பின் இரவில் கசியும்
இன்னிசையில்,
பறிமாறிக்கொண்ட
கடைசி முத்தத்தின்
ருசியில்,
மதுக்கோப்பையின்
ஒரு கடைசித் துளியில்,
ஒரு பொன்நிறவு
பொழுதில் நிகழ்ந்த,
புணர்ச்சியின்
உச்சத்தில்முனகிய
மெல்லிசையில்,
என் உயிர் வலித்த
உன்மத்த நிலையில்,
பித்தனைப்போல்
உன் பிம்பம்
தேடி அலைகிறேன்
ம்..ம்..ம்
எதுவுமே மாறவில்லை
மிக அரிதாகவே
நிகழும் நம்
சந்திப்புகள் உட்பட…
ம்..ம்..ம்
நீ வருவதற்கான எந்த
முகாந்திரமும் தெரிவதாய்
இல்லை.
ஒரு
அரவமற்ற நடுநிசியின்
நிலவொளியில்,
இலக்கில்லாமல்,
திசையறியாமல்
வெறுமையாய் தொடர்கிறது
என் பயணம்
உன் நினைவுகளைச்
சுமந்தபடி.
நிழலான நிஜங்கள்
10 அக் 2008 13 மறுமொழிகள்
in கவிதைகள்
நிஜம்
நமக்குள் விளக்கமுடியாத
ஒரு உறவிருப்பதும்
நிஜம்.
அதீதமாய் நானுன்னை
நேசித்ததும் நிஜம்
அதை நிஜமென நீ
நம்பமறுத்ததும் நிஜம்.
விருப்பமில்லாமலே
நீயென்னை வீசியெறிந்ததும்
நிஜம்.
நீயும் நீ சார்ந்தவைகள்தான்
என் உலகம் என்பதும் நிஜம்,
அவையின்றி சுகவீனமாய்
நான் இருப்பதும் நிஜம்.
நம் உறவு முறிந்த
ஒரு கருப்பு நாளில்
கதறியழுத என் கண்களில்
உனக்கான் ஈரம் இன்னும்
மிச்சமிருப்பதும் நிஜம்.
நீ விலகிச்செல்லும்
ஒவ்வொரு தருணமும்
நான் மரணத்தை
நெருங்கிக்கொண்டுருப்பதும்
நிஜம்.
உயிர் பிரியும்வரை நியென்
உடனிருப்பாய் என நான்
நம்பியதும் நிஜம்,
அது பொய்யென என்
உயிர் கிழித்ததும் நிஜம்.
நீ என்னை ஏற்கும்
திருநாள் காணும் வரை
காலன் அவன் கரங்களில்
சிறைப்பட மறுக்கிறதடி
என் மனம்.
எங்கே எனது கவிதை…
21 மே 2008 8 மறுமொழிகள்
in கவிதைகள்
யாருமில்லா தனிமையில்
நான்…
கண்ணீரும் கதைத்துக்
கொண்டிருக்க…
நினைவுகளோடு நீச்சலடித்துக்
கொண்டிருந்தேன்…
நினைவாகவே நான்,
எப்பொழுதாவது
நினைப்பாயா நீ…
பேச்சுக்கள்
அன்று…
இருந்தும் மெளனமாய்
இன்று…
தோழமை தாங்கிய தோள்கள்
பாசம் போதித்த ஸ்பரிசங்கள்
என…
அன்று
ஏனோ இழந்தோம்
இன்று…
யுத்தமொன்று செய்கிறாய்…
அன்பை வேண்டி
மல்லுகட்டி நிற்பேனோ
மண்டியிட்டுப் போவேனோ!
வர்ணம் மாறிய
வண்ணத்துப்பூச்சி ஒன்று…
முகத்திரையிட்டு
மெளன ராகம்
பாடுகிறது…
விடு பட்டுப்போன
என் பிரியங்களுக்கு
இரங்கற்பா இசைத்துக்
கொண்டிருக்கிறேன்…
சுப வேளையிலாவது
சொல்லிவிடு…
எங்கே வைத்திருந்தாய்
என்று…
தீக்குச்சி
13 மே 2008 7 மறுமொழிகள்
in ஹைக்கூ
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிக்கிறாள்.
மானமுள்ள தீக்குச்சி.
துளிப்பா – 1
13 மே 2008 8 மறுமொழிகள்
சாதிகள் இல்லையடி
பாப்பா!
எல்லா மக்களும்
மேன்மக்களே!
உத்தப்புரம்,பாப்பாபட்டி,கீரிப்பட்டி.
நிறமுண்டு
சாயப்பட்டறைக் கழிவுகள்.
முடமான கோழிகள்
முதியோர் இலலம்.
முடமான குஞ்சுகள்
குழந்தைகள் காப்பகம்.
குழந்தைகள் தின விழா
சிவகாசியில் கோலாகலம்.
அமைப்போம்.
அந்த காண்டிராக்டில்
ஓர் ஊழல் செய்வோம்.
அரசியல்வாதி.
கல்லறைப் பூக்கள்
21 Apr 2008 7 மறுமொழிகள்
in கவிதைகள்
தென்றலாய் தீண்டிவிட்டு,
இன்று தீயாய் சுடுகிறாய்.
பூவாய் வாசம் தந்துவிட்டு,
இன்று புயலாய் தாக்குகிறாய்.
ஒவ்வொரு முறையும்,
எதையாவது பேசிவிடத்
துடிக்கிறது மனசு.
என் மூச்சுக் காற்று நீளும்முன்பே,
ஆழ்ந்த மெளனம் கொண்டு
என் சிந்தனையை சிறைப்பிடித்து
முதல் புள்ளியை
முற்றுப்புள்ளியாக்கிவிடுகிறாய்.
சமாதானமாய் மண்டியிட்டுப் போவது,
உன் முன் மட்டுமே சாத்தியம்.
விழிகளிலே காதல் தந்தாய்,
ஸ்பரிசத்தால் பரவசம் தந்தாய்,
ஆனால்,வார்த்தைகளில்
வன்முறை தந்துவிட்டு,
வாச மலரை நேசிக்கச் சொல்கிறாய்.
உன் விருப்பமென்றால்,
விலகலுக்கான காரணத்தையாவது
சொல்லிவிடு,
விருப்பமாய் நீ வாழவே,
விடைபெறுகிறேன்.
நம் உறவின் நெருக்கத்தை
என் கவிதை மட்டும்
விளக்கிடுமா என்ன?
கண்ணீர் காலங்கள்
14 Aug 2007 8 மறுமொழிகள்
in கவிதைகள்
உன்னிடம் மனம் விட்டுப்பேச,
வம்பு பேசி அரட்டையடிக்க,
உன் தோள்சாய்ந்து ஆறுதல் தேட,
கவலை மறந்து
உன் கரம் பற்றி முத்தமிட,
ஆயிரம் விசயங்கள் உண்டு என்னிடம்…
ஏக்கத்தின் எதிரொளியாய் நானிருக்க,
நிராகரிப்பின் நெடுவுருவமாய் நீயிருக்க,
விரும்பி வந்தாலும் விலகியே இருக்கிறாய்…
இடம் மாறியதால் உன் இதயம் மாறியதோ?
கணப்பொழுது கோவத்தில்
நம் நட்பும் காலாவதியானதோ?
சோகங்களை என் சொந்தமாக்கிவிட்டு
சென்றதினால்,
என் சடலம் எரிந்து சாம்பலாகும் வரை,
என் புலம்பலும் ஓயப்போவதில்லை.
அதுவரை, நீ எழுதிவிட்டுப்போன,
என் விழியோரம் வழியும்,
கண்ணீர் கவிதைகளை யார் வாசிப்பது?
நீ வருவாய் என!
10 ஜூலை 2007 2 மறுமொழிகள்
in கவிதைகள்
நின்றவள் நீ..
முளைத்துக்
காத்துக்
நீ..நான்..காதல்
26 ஜூன் 2007 11 மறுமொழிகள்
in கவிதைகள்
எனை தாக்கிய புயலும் நீ,
எனை தழுவிய தென்றலும் நீ.
எனை சூழ்ந்த சோகம் நீ,
சோகம் தரும் சுகமும் நீ.
என் தேகம் நீ,
தேகம் தாங்கும் உயிரும் நீ.
உன் விழியால் எனை சுட்டெரித்தவளும் நீ,
பின் சுண்டியிழுத்தவளும் நீ.
என் காதல் நீ,
காதல் தந்த கவிதையும் நீ.
என் காதல் மேகம் நீ,
மேகம் தரும் மழையாய் நீ.
ஜாடை பேசும் ஓடை நீ,
ஓடை தரும் குளிர் நீரும் நீ.
என் இதயத்தில் நீ,
என் இதயத்துடிப்பாய் நீ.
எனை கள்வனாக்கியதும் நீ,
கள்வனின் காதலியாய் நீ.
என் மனைவியும் நீ,
என் மழலையாய் நீ.
என் முதலும் நீ,
என் முடிவாய் நீ.





கருத்து சொல்றாங்கோ!