நிழலான நிஜங்கள்
10 அக் 2008 13 மறுமொழிகள்
in கவிதைகள்
நிஜம்
நமக்குள் விளக்கமுடியாத
ஒரு உறவிருப்பதும்
நிஜம்.
அதீதமாய் நானுன்னை
நேசித்ததும் நிஜம்
அதை நிஜமென நீ
நம்பமறுத்ததும் நிஜம்.
விருப்பமில்லாமலே
நீயென்னை வீசியெறிந்ததும்
நிஜம்.
நீயும் நீ சார்ந்தவைகள்தான்
என் உலகம் என்பதும் நிஜம்,
அவையின்றி சுகவீனமாய்
நான் இருப்பதும் நிஜம்.
நம் உறவு முறிந்த
ஒரு கருப்பு நாளில்
கதறியழுத என் கண்களில்
உனக்கான் ஈரம் இன்னும்
மிச்சமிருப்பதும் நிஜம்.
நீ விலகிச்செல்லும்
ஒவ்வொரு தருணமும்
நான் மரணத்தை
நெருங்கிக்கொண்டுருப்பதும்
நிஜம்.
உயிர் பிரியும்வரை நியென்
உடனிருப்பாய் என நான்
நம்பியதும் நிஜம்,
அது பொய்யென என்
உயிர் கிழித்ததும் நிஜம்.
நீ என்னை ஏற்கும்
திருநாள் காணும் வரை
காலன் அவன் கரங்களில்
சிறைப்பட மறுக்கிறதடி
என் மனம்.

கருத்து சொல்றாங்கோ!