எதுவும் மாறவில்லை
பின் இரவில் கசியும்
இன்னிசையில்,
பறிமாறிக்கொண்ட
கடைசி முத்தத்தின்
ருசியில்,
மதுக்கோப்பையின்
ஒரு கடைசித் துளியில்,
ஒரு பொன்நிறவு
பொழுதில் நிகழ்ந்த,
புணர்ச்சியின்
உச்சத்தில்முனகிய
மெல்லிசையில்,
என் உயிர் வலித்த
உன்மத்த நிலையில்,
பித்தனைப்போல்
உன் பிம்பம்
தேடி அலைகிறேன்
ம்..ம்..ம்
எதுவுமே மாறவில்லை
மிக அரிதாகவே
நிகழும் நம்
சந்திப்புகள் உட்பட…
ம்..ம்..ம்
நீ வருவதற்கான எந்த
முகாந்திரமும் தெரிவதாய்
இல்லை.
ஒரு
அரவமற்ற நடுநிசியின்
நிலவொளியில்,
இலக்கில்லாமல்,
திசையறியாமல்
வெறுமையாய் தொடர்கிறது
என் பயணம்
உன் நினைவுகளைச்
சுமந்தபடி.

அருமை அருமை கவிதை அருமை சங்கர
கடைசி முத்தத்தின் ருசி
மதுக்கோப்பையின் கடைசித்துளி
புணரும்பொழுது – உச்சத்தில் முனகிய மெல்லிசை
அடடா என்ன கற்பனை என்ன கற்பனை
நன்று நன்றி சங்க்ர
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
எழுதியவர் Cheena நாள் April 2, 2010
நேரம் 3:27 பிற்பகல்
நல்ல கவிதை
தொடரட்டும்
எழுதியவர் seelvraj நாள் April 2, 2010
நேரம் 3:29 பிற்பகல்
அன்பின் சங்கரன்,
>> இலக்கில்லாமல்,
திசையறியாமல்
வெறுமையாய் தொடர்கிறது
என் பயணம்
உன் நினைவுகளைச்
சுமந்தபடி. >>
அருமையான வார்த்தைகளைச் சுமக்கும் கவிதைக் கப்பல்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
எழுதியவர் Sakthi நாள் April 5, 2010
நேரம் 6:11 பிற்பகல்
super.
எழுதியவர் sridhar நாள் April 7, 2010
நேரம் 7:56 பிற்பகல்
காதலும் காமமும் நிறைந்த வரிகள்.
இவை வரிகளல்ல, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளங்கள்.
தொடர்ந்து எழுதவும்…
நட்புடன்,
காமினி
எழுதியவர் Kamini நாள் April 7, 2010
நேரம் 8:06 பிற்பகல்
friends thanks a lot ur comments/wishes.
எழுதியவர் shangaran நாள் April 7, 2010
நேரம் 8:07 பிற்பகல்
Nice lines …
எழுதியவர் Kalaivani நாள் April 7, 2010
நேரம் 8:14 பிற்பகல்
இலக்கில்லாமல்,
திசையறியாமல்
வெறுமையாய் தொடர்கிறது
என் பயணம்
உன் நினைவுகளைச்
சுமந்தபடி.
—–> என்னை ஈர்த்த வரிகள்……வாழ்த்துக்கள் தோழா……..
இது என் வரிகள்………
“உன்னை விட நானே அதிகமாய் நேசிக்கப்பட்டேன்…உன்னை கொண்டு கவிதை நிரப்பிய தாளினால்…….
எழுதியவர் Nandini Sri நாள் April 10, 2010
நேரம் 10:57 பிற்பகல்
Thalai welcome back
ummai roomla thaniya irukavittadhu thappumvoi
neer yenna senjeerunnu umma kavithai varigal solluthu
well its really awesome and i can feel your pain…
rgds,
S
எழுதியவர் S நாள் April 29, 2010
நேரம் 1:16 மு.பகல்
after a loooooooooooooooooooong time return to blog with baaaaaaaaaaaaang
great but vist to your home regularly pa?
எழுதியவர் vinodpragadeesh நாள் ஜூலை 21, 2010
நேரம் 12:37 பிற்பகல்
Hi Vinod,
Thnx a lot for comments & encouragement.
cheers,
Shangaran
எழுதியவர் shangaran நாள் ஜூலை 21, 2010
நேரம் 10:27 பிற்பகல்